வவுனியாவில் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டிய மூவர் கைது!!

273

வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் நேற்று (19.01.2018) இரவு உள்ளுராட்சி தேர்தல் சம்பந்தமான சுவரொட்டிகளை ஒட்டிய மூவரை வவுனியா பண்டாரிக்குளம் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கூமாங்குளம், பண்டாரிக்குளம் பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகள் ஒட்டுவதாக பண்டாரிக்குளம் பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சுவரொட்டிகளுடன் உக்குளாங்குளம் பகுதியினைச் சேர்ந்த 48, 31,20 வயதுடைய மூன்று பேரை கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து சுவரொட்டிகளையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.