தீவிர அரசியலில் களமிறங்குவதற்கு தயாராகவுள்ளதாக நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தாம் ஏற்கனவே திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருப்பதாகவும், நடிப்புத்துறைக்கு வருவதற்கு முன்னர் அரசியலில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
நடிப்பதற்கு ஆரம்பித்த பின்னர் அரசியலில் இருந்து சற்று விலகியிருந்ததாகவும் குறிப்பிட்டார்.
தற்போது பல நடிகர்கள் அரசியலுக்கு வரும் நிலையில் தாமும் தீவிர அரசியலுக்கு வரும் நேரம் வந்துவிட்டதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






