வவுனியாவில் தந்தையையிழந்து வாழும் இளைஞனுக்கு உதவிகள் வழங்கல்!!

577

 
வவுனியா விநாயகபுரத்தில் தந்தையினையிழந்து தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வரும் ரஞ்சரூபன் (வயது 34) தீடிரென ஏற்பட்ட கண்டுபிடிக்க முடியாத நோயினால் நடக்க முடியாத நிலையில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றார்.

இந்த நிலையில் தனக்கு உதவி செய்யுமாறு தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணனிடம் விடுத்த வேண்டுகோளிக்கிணங்க அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வரும் ரமேஸ் அவர்களினால் சக்கரநாற்காலி, சாரம்,போர்வை , ஆடைகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இப் பொருட்களை தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், மற்றும் செயலாளர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் இன்று (22.01.2018) நேரில் சென்று வழங்கினர்.