வவுனியா நெளுக்குளம் பகுதியிலுள்ள வீடு ஒன்றிற்குள் புகுந்த முதலை ஒன்றினை அப்பகுதியிலுள்ளவர்களினால் மடக்கிப்பிடிக்கப்ட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இன்று அதிகாலை 3.30 மணியளவில் நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அருகிலுள்ள வீடு ஒன்றிற்குள் திடீரெனப் புகுந்து மறைந்துகொண்ட ஆறு அடி நீளமான முதலையினை அவதானித்த வீட்டு உரிமையாளர் அயலவர்களின் உதவியுடன் முதலையினை மடக்கிப்பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளார்.
தற்போது குளங்களின் நீர் மட்டம் இன்றி முதலைகள் வெளியேறி வீடுகளை நோக்கியும், வயல்களை நோக்கியும் செல்வதைக்காணக்கூடியதாகவுள்ளது.