தற்கொலை செய்து கொண்டது ஏன் : இளம்பெண்ணின் உருக்கமான வீடியோ!!

869

 
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக பெண் ஒருவர் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ள வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெய்ப்பூரை சேர்ந்த பெண் ஜாஸ்லின் கவுர், 30 வயதாகும் ஜாஸ்லின் சமீபத்தில் கங்கை நதியில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு முன்பாக பேஸ்புக்கில் வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் தனது மாமியார் தன்னை அவமானப்படுத்தியதால் வாழ்வை முடித்துகொள்ளப் போவதாக பேசியுள்ளார்.

இதுகுறித்து அவருடைய கனவர் பவ்னீத் கூறுகையில், தன் மனைவி சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் தேர்வுக்கு தயாராகிகொண்டு இருந்தார் எனவும், அதில் தோற்றதும் தற்கொலைக்கு காரணமாக அமைந்து இருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கான்பூர் பாண்டூ நகர் பகுதி காவல்துறை கண்காணிப்பாளர் (மேற்கு) கவுராவ் குரோவர் கூறுகையில், ஜாஸ்லினின் உடலை உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளதாகவும், பிரேத பரிசோதனை செய்த பின்னர் அவரது பெற்றோர் தரப்பை கேட்டறிந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.