கடற்படை வாகனம் மோதி  புங்குடுதீவில் பள்ளி மாணவி பலி மேலுமொருவர் படுகாயம்!!

751

யாழ். புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகில் இன்று காலை கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் தலத்திலேயே பலியாகியுள்ளார்.

அதே இடத்தினைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே கடற்படையின் வாகனம் மோதி விபத்து நேர்ந்துள்ளது.

கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனமே மோட்டார் சைக்கிளை மோதியுள்ளது. இந்த நிலையில் மாணவியுடன் பயணித்த அவரது மாமனார் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இதேவேளை சம்பவ இடத்திற்கு ஊர்காவற்துறை பொலிஸார் சென்றுள்ளதுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.