தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த இளைஞர் மீது மோதிய ரயில்!!

760

ஹைதராபாத்தை சேர்ந்த இளைஞர் விரைவு ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்று செல்பி எடுக்க முயன்று ரயிலில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அந்த இளைஞர் பெயர் சிவா. அவர், கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர், பாரத் நகர் ரயில் நிலையத்துக்கு சற்றுத் தொலைவில் ரயில் வந்துகொண்டிருக்கும் தண்டவாளத்தின் அருகில் நின்று செல்ஃபி வீடியோ எடுத்துள்ளார்.

தொலைவிலிருந்து வரும் ரயில், அருகில் வரும்வரை செல்பி ஸ்டைலில் தொடர்ச்சியா வீடியோ எடுத்துள்ளார். அவர், தன் மீது ரயில் மோதும் என்பதை கணிக்காமல் தண்டவாளத்தின் மிக அருகே நின்று வீடியோ எடுத்துக்கொண்டிருக்கும்போதே ரயில் அவர் மீது மோதியது வீடியோவில் பதிவாகியுள்ளது.

சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்த அவரை, ரயில்வே பொலிஸார் அருகிலிருந்த மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.

அவர் தற்போது நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.