மிஸ் கோல் மூலம் காதலில் விழுந்த இளம் பெண் : காதலன் செயலால் எடுத்த விபரீத முடிவு!!

603

தமிழகத்தில் காதலன் ஏமாற்றியதல் இளம் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எண்ணூர் சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர். ஆட்டோ டிரைவரான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும் சந்தியா (19) என்ற மகளும் உள்ளனர்.

தனியார் கிளினிக்கில் தாதியாக பணிபுரிந்து வரும் சந்தியாவுக்கும், தாம்பரத்தை சேர்ந்த அஜிஸ் என்ற ரபீக் (26) என்பவரும் கடந்த ஒரு வருடத்துக்கு முன், மிஸ் கோல் மூலம் நண்பராகினர். அதன் பின் இது காதலாக மாறியுள்ளது.

ஆனால் இவர்களின் காதலுக்கு ரபீக்கின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழந்து வந்தனர்.

இந்நிலையில் சந்தியாவின் தந்தை மகள் காணமல் போனது குறித்து பொலிசில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் இருவரும் திருவண்ணாமலை பகுதியில் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக அவர்களை மீட்ட பொலிசார், பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். காவல்நிலையத்திற்கு வந்த அவர்கள் நாங்களே பேசித் தீர்த்துக் கொள்வதாக கூறி சென்றுள்ளனர்.

ஆனால் ரபீக்குக்கோ வேறு இடத்தில் பெண் பார்க்கும் முனைப்பில் அவரின் பெற்றோர் இறங்கியுள்ளனர். இந்த விவகாரம் சந்தியாவுக்கு தெரியவர, ரபீக்கிடம் கேட்ட போது, அவர், ராயபுரத்தில் போக்குவரத்து பொலிசாக இருக்கும் எனது பெரியப்பா நமது திருமணத்திற்கு உதவி செய்வார் என்று கூறியுள்ளார். சந்தியாவின் வீட்டிற்கு சென்ற பெரியப்பா இதைப் பற்றி பேசியுள்ளார். அப்போது சந்தியா அவர் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்று கண்ணீர்விட்டுள்ளார்.

இதுபற்றி நான் பேசி திருமணத்திற்கு ஏற்பாடு செய்கிறேன் என்று கூறிச் சென்ற அவர் பின்னர் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கைவில்லை. இதன் காரணமாக சந்தியாவின் பெற்றோர், ரபீக்கின் வீட்டிற்கு சென்று திருமணம் பற்றி பேசியுள்ளனர். அதற்கு அவர்கள் எங்கள் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால், திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளனர்.

இதைக் கேட்டு மனமுடைந்து காணப்பட்ட சந்தியா, தன்னை ரபீக் ஏமாற்றிவிட்டான் என்று கூறி நேற்று முன் தினம் வீட்டில் மண்ணெண்ணயை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்தார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இருந்த போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.