60 வயது மூதாட்டியின் முகத்தில்10 முறை சுட்ட கொலைகாரர்கள்!!

703

மத்தியபிரதேசத்தில் 60 வயது மூதாட்டியை 3 நபர்கள் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது..

60 வயது மூதாட்டி தனது வீட்டின் வெளிப்புறத்தில் உள்ள கட்டிலில் மற்றொரு பாட்டியுடன்சேர்ந்து அமர்ந்திருக்கிறார். அப்போது, முகத்தில் துணியை மூடிக்கொண்டு அங்கே வந்த நபர்கள், அந்த மூதாட்டிக்கு அருகில் இருந்தவரை விரட்டிவிட்டு துப்பாக்கியால், மூதாட்டியின் முகத்தில் 10 முறை சுட்டுள்ளனர்.

மேலும் உடல் முழுவதும் சுமார்10 புல்லட்டுகளால் துளைத்ததில், சம்பவ இடத்திலேயே அந்த மூதாட்டி உயிரிழந்தார், இவரின் மகனும் அதே கிராமத்தில் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்த மூதாட்டியின் கணவரை கொலை செய்த வழக்கில், அதே கிராமத்தை சேர்ந்த5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்கவேண்டும் என்பதில், தாயும் அவரது மகனும் உறுதுணையாக இருந்தனர். இதனால், இவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர் என பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

3 பேரில் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளார், விரைவில் எஞ்சியுள்ள குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்று ஆனந்தகுமார் என்ற பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.