ரயிலில் இனவெறி தாக்குதல் நடத்திய லண்டன் பெண் : புகைப்படங்கள் வெளியீடு!!

982
பிரித்தானியா ரயிலில் பயணம் செய்த பெண், தாய் மற்றும் மூன்று பிள்ளைகள் மீது இனவெறி தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணை பொலிசார் தேடி வருகிறார்கள்.

லண்டனில் உள்ள Central line Tube ரயில் பாதையில் பயணிக்கும் ரயிலில் இச்சம்பவம் கடந்த மாதம் 28ஆம் திகதி நடந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து பொலிசார் தெரிவிக்கையில்..

இளம் தாய் ஒருவர் தனது மூன்று குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார். அப்போது எதிரில் உட்கார்ந்திருந்த பெண் அவர்களிடம் இனவெறியை தூண்டும் விதத்தில் கோபமாக கத்தியபடி பேசியுள்ளார்.

இதோடு குழந்தைகளின் தாயின் வயிற்றில் எட்டி உதைத்துள்ளார். துஷ்பிரயோக வார்த்தைகளை பெண் 20 நிமிடங்கள் வரை உபயோகித்துள்ளார் என கூறியுள்ளனர்.

இந்நிலையில் இனவெறி தாக்குதல் நடத்திய பெண்ணின் புகைப்படத்தை பொலிசார் தற்போது வெளியிட்டுள்ளனர்.
பெண் குறித்த தகவலை பொதுமக்கள் தங்களிடம் தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரி ஆலோம் உடின் கூறுகையில், பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தைகளுக்கு இது முற்றிலும் மோசமான அனுபவமாக இருந்துள்ளது. பெண்ணின் அவமானகரமான செயல்களால் அவர்கள் பயந்துள்ளனர்.

இது போன்ற வெறுப்புணர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாது, சம்பவத்தில் ஈடுபட்ட பெண்ணின் அடையாளத்தை கண்டுப்பிடிக்க கடுமையாக முயன்று வருகிறோம் என கூறியுள்ளார்.