வவுனியா கற்பகபுரத்தில் 21 வயதுப் பெண் வீட்டின் சமையலறையிலிருந்து சடலமாக மீட்பு!!

713

வவுனியா கற்பகபுரத்தில் இன்று (26.01.2018) மதியம் 1.30 மணியளவில் 21 வயதுப் பெண்ணொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியா கற்பகபுரம் 5ம் ஒழுங்கையில் வசித்து வரும் அர்ச்சுனன் கோகிலவதனி ( வயது 21) என்பவர் வீட்டார் சிதம்பரபுரம் சென்ற சமயத்தில் அவரது சகோதரனுடன் வீட்டில் இருந்துள்ளார். சகோதரனும் வெளியே சென்ற சமயத்தில் வீட்டின் சமையலறையில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளார்.

சில மணி நேரம் கழித்து சகோதரன் வீடு திரும்பிய சமயத்தில் சகோதரி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதையடுத்து உடனடியாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.