பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட மாணவிக்கு நேர்ந்த விபரீதம்!!

669
அம்பலந்தோட்டையில் பேருந்திலிருந்து கீழே இறங்க முற்பட்ட போது ஏற்பட்ட விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பட்டபொல, எட்டம்பகஹா பகுதியில் இன்று மாலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் 18 வயதான எட்டம்பகஹா பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.