Doomsday Clock இல் 2 நிமிடங்களே எஞ்சியுள்ளன : உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக எச்சரிக்கை!!

1457

உலகத் தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர்கள் ஏற்பட்டு, உலகம் அழிவை நோக்கிப் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளைக் குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் Doomsday Clock அமெரிக்காவில் உள்ள சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

1947 ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிக்காலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. தற்போது 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Doomsday Clock இல் தென் சீனக் கடல் பற்றிய பதற்றங்கள், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதல், காலநிலை மாற்றங்கள் ஆகியவை அடங்கும்.

தற்போது நிலவும் அணு ஆயுத ஏவுகணை சோதனைகளால் வட கொரியா அமெரிக்காவிற்கு ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதனால் உலகம் அணு ஆயுதப் போரால் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகச்சூழலைப் பொறுத்து இந்தக் கடிகாரத்தின் நேரத்தை விஞ்ஞானிகள் மாற்றியமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.