ஐதராபாத் நகரில் ஹிமாயத்நகர் பகுதியில் நேற்று நகைக்கடை திறப்பு விழாவுக்கு நடிகை தமன்னாவை வந்திருந்தார்.
அவரை பார்க்க அந்த கடையின் அருகே ஏராளமான ரசிகர்கள் திரண்டிருந்தனர். திறப்பு விழா முடிந்து கடையில் இருந்து வெளியே வந்த தமன்னாவை நோக்கி கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசத்துடன் செருப்பை தூக்கி வீசி எறிந்தார்.
சற்று குறிதவறி பறந்துவந்த செருப்பு புதிய நகைக்கடை பணியாளர் மீது விழுந்தது. செருப்பு வீசிய நபரை நாராயன்குடா பொலிசார் கைது செய்தனர்.
சமீபகாலமாக தமன்னா நடித்த படங்களில் அவரது கதாபாத்திரம் தனக்கு பிடிக்காததால் அவரை செருப்பால் அடிக்க முயன்றதாக கைதான கரிமுல்லா(31) என்ற பட்டதாரி தெரிவித்துள்ளார்.
நகைக்கடை பணியாளர் அளித்த புகாரின்பேரில் கரிமுல்லா மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.