வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று (29.01.2018) மாலை 3 மணிக்கு வவுனியா நகரசபை பழைய மண்டபத்தில் நடைபெற்றது.
வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மு.சிற்றம்பலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் விசேட விருந்தினராக வவுனியா மாவட்ட உயர் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசி மகேந்திரன் கலந்துகொண்டிருந்தார்.
நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயகல்வி பணிப்பாளர் மு.ராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தார்.
வவுனியா மாவட்டத்தில் உயர்தரப்பரிட்சையில் முதல் முன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கும், ஐந்தாம் ஆண்டு புலைமைப்பரிசில் பரீட்சையில் வவுனியா மாவட்டத்தில் விசேட சித்திபெற்ற மாணவர்களுக்கு புலைமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
கணிதப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், கலைப்பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், வர்த்தகப் பிரிவில் மூன்று மாணவர்களுக்கும், இ-டெக் பிரிவில் ஆறு மாணவர்களுக்கும், விசேட பிரிவில் மூன்று மாணவர்கள் உட்பட புலைமைப்பரீட்சையில் விசேட சித்திபெற்ற 11 மாணவர்களுமாக மொத்தம் 32 மாணவர்களுக்கு புலைமைப்பரிசில் வழங்கி வைக்கப்பட்டது.
புலைமைப்பரிசில் வழங்கியவர்களுக்கு மாலை அணிவித்து கௌரவம் வழங்கப்பட்டதுடன் மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தனர்.
நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராஜா, சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் ஆர்.தயாபரன், செயலாளர் அன்ரன் புனிதநாயகம், சட்டத்தரணி ரீ.கெங்காதரன் மற்றும் வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டிருந்தனர்.










































