வவுனியா புகையிர வீதியில் இன்று (30.01.2018) காலை 10.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா குருமன்காட்டு சந்தியிலிருந்து வவுனியா நகர் நோக்கி பணத்தை (காசு) ஏற்றிக்கொண்டு பயணித்த வான் வைரவப்புளியங்குளம் பஜாச் விற்பனை நிலையத்திற்கு அருகே வீதியின் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் அதே பாதையில் வவுனியா நகர் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கில் மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த 23 வயது மதிக்கத்தக்க இளைஞன் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.












