கடந்த 2005ம் ஆண்டு வவுனியா பூந்தோட்டம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது குறித்த நபர் தனது பக்கத்து வீட்டு சிறுமியை வீட்டிற்குள் அழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இதனை அம் முகாமில் அரசசார்பற்ற நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் கண்டு அச்சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதுடன் சிறுமியின் தயாரிடம் சம்பவத்தைத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து தயார் குறித்த சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றதுடன் பொலிசார் சிறுமியின் வாக்குமூலத்தினை வைத்தியசாலையில் வைத்து பதிவு செய்துள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்து வவுனியா நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர்.
விளக்கமறியலில் வைக்கப்பட்ட நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தது. கடந்த 2017.10.24அன்று சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பகிர்வுப் பத்திரம் வவுனியா மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்ததுடன் சாட்சிகள் நெறிப்படுத்தப்பட்டு நேற்றைய தினம் 29.01.2018 தீர்ப்பிற்கு திகதியிடப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் குறித்த எதிரியைக் குற்றவாளியாகக்கண்டு கொள்ளப்பட்டு எதிரிக்கு எதிரான முதலாவது குற்றச்சாட்டுக்கு இரண்டு வருடசிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபா அபராதமும் அதைச்செலுத்தத்தவறின் ஒரு மாத சாதாரண சிறை தண்டனையும் மற்றும் இரண்டாம் மூன்றாம் குற்றச்சாட்டுகளுக்கு 10வருட கடூழியச்சிறைத்தண்டனையும் ஆயிரம் ரூபா அபராதமும் அதனைச் செலுத்தத்தவறினால் ஒரு மாதம் சாதாரண சிறைத்தண்டனையும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு இலட்சம் ரூபா நஷ்ட ஈடு செலுத்துமாறும் அதைச்செலுத்தத்தவறினால் ஒரு வருடம் கடூழியச்சிறைத்தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தள்ளார். இத்தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கப்படும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.






