“கட்சி எதுவாக இருந்தாலும் சாராயம், பியர் , சிகரட் , கசிப்பு , கஞ்சா விற்பனையாளர்கள் மற்றும் அதன் முகவர்கள் தெரிவு செய்யப்பட்டால் கிராமத்தில் உள்ளவர்களின் மூளையின் அளவு விளங்கும்” என உள்ளுராட்சி தேர்தல் சூடு பிடித்துள்ள இவ் வேளையில் வவுனியாவில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக வவுனியா நகர், வைரவப்புளியங்குளம், புகையிரத நிலைய வீதி , நூலக வீதி என பல்வேறு இடங்களில் சுவரோட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இவ் விடயம் தொடர்பாக இளைஞர்கள் கருத்து தெரிவிக்கையில்,
கிராமத்தில் உள்ள இளைஞர்களுக்கு சாராயம் , பியர் , சிகரட் , கஞ்சா குடிக்க பழக்கும் மற்றும் கிராம அபிவிருத்திக்கு கிடைக்கும் பணத்தினை கொள்ளையடிக்கும் மற்றும் குடித்தாலும் குடிக்காவிட்டாலும் சாராயம் , பியர் , சிகரட் , கஞ்சா கொடுத்து வாக்கு கேட்கும் மற்றும் பெண்களை தரக்குறைவாக கருதும் மற்றும் சூழல் தொடர்பில் எந்த வித உணர்வும் இல்லாத ஒருவர் தெரிவானால் எங்கள் நிலமை என்ன? எனவே வாக்காளர் ஆகிய நாங்கள் சற்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.











