பீகாரில் இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் வட்ஸ் அப் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே, துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவின் சையச்சக் பகுதியில் வசித்து வந்தவர் ஏ.கே.ஏ. ஆகாஷ்குமார், 19 வயதான இவர் தனது வீட்டுப் படுக்கையறையில் தலையில் குண்டுக் காயத்துடன் இறந்து கிடந்துள்ளார், அவரின் அருகிலேயே கைத்துப்பாக்கி ஒன்றும் கிடந்துள்ளது.
தனது காதலியுடன் வட்ஸ்அப்பில் பேசிக்கொண்டே, தற்கொலை செய்து கொள்ள போவதாக துப்பாக்கியை தலையில் வைத்து மிரட்டியுள்ளார். அச்சமயம் துப்பாக்கி தற்செயலாக வெடித்ததால், அவர் இறந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து பொலிசார் நடத்திய விசாரணையில், குறித்த இளைஞர் தேர்வில் தோல்வி அடைந்ததுடன், காதல் பற்றியும் குடும்பத்திற்கு தெரியவந்ததால் மன அழுத்தத்தில் இருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் ஆகாஷின் காதலி மற்றும் அவரின் குடும்பத்தினரின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






