கொரட்டூர் – அம்பத்தூர் இடையே பட்டறைவாக்கம் ரயில் நிலையத்தில் பயங்கர ஆயுதங்களுடன் மாணவர்கள் மோதலில் ஈடுபட்டதால் பயணிகள் அலறியடித்து வெளியேறியுள்ளனர்.
சென்னை அம்பத்தூர் அருகே பட்டரைவாக்கம் ரயில் நிலையத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் கத்தி, வாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் விரட்டி விரட்டி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
இதைப்பார்த்த பயணிகள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களை வீசி தாக்கியதால் பதற்றம் எற்பட்டுள்ளது.
ஆயுதம் கொண்டு வந்த மாணவர்கள், ஒரு பெட்டியில் இருந்த மாணவர்களை துரத்தி துரத்தி வெட்டினர். இதில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் திருவள்ளூர், அரக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
சமீபத்தில் கையில் கத்தியுடன் சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலைய பிளாட்பார்மில் பயணிகளை அச்சுறுத்திய சில மாணவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






