தெலுங்கானாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு உடல் துண்டாக்கப்பட்டு சாக்கு மூட்டையில் வைத்து தூக்கி வீசப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தின் கொண்டப்பூர் பகுதியில் உள்ள ஐடி மையத்துக்கு அருகில் உள்ள சாலையில் இன்று காலை சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. மூட்டையிலிருந்து ரத்தம் வடிவதை பார்த்த அவ்வழியே சென்ற மக்கள் இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மூட்டையை பிரித்து பார்த்த போது அதில் பெண்ணின் சடலம் துண்டாக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. சம்பவ இடத்திலிருந்து சில தடவியல் ஆதாரங்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது இன்னும் தெரியாத நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கமரா காட்சிகளை வைத்து பொலிசார் தங்கள் விசாரணையை தொடங்கவுள்ளார்கள். சம்பவமானது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.






