வவுனியா சிதம்பரபுரம் திருப்பழனி முருகன் ஆலயத்தில் முருகன் ஔவையார் சிலைகள் திறப்பு!

1902

வவுனியா சிதம்பரபுரத்தில் மலை மீது அமர்ந்து இருக்கும் திருப்பழனி முருகன் ஆலயத்தில்  தை பூச தினமான இன்று  பூசை நிகழ்வு இந்திய துணை தூதர் திரு. ஆர். நடராஜன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் ஆகியோரின் பங்கு பற்றலுடன் இடம்பெற்றது.

வட மாகாண சபை உறுப்பினர் ஜி. ரி. லிங்கநாதன் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் மலை மீது முருகன் மற்றும்  ஓளவையாரது  சிலைகள் நிறுவப்பட்டு   இன்றைய  தினம்  திறந்து வைக்கப்பட்டது.