என் மகளை கொன்று விடுங்கள் : அசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட அழகியின் தற்போதைய நிலை!!

507

 
இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் அசிட் வீச்சுக்கு இரையான இளம்பெண் ரூபாலி தனக்கு நடந்த கொடூர அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

உத்தரபிரதேசத்தில் போஜ்புரி திரைப்படங்களில் நடித்துவந்த ரூபாலி, கலைநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் பொருட்டு கடந்த 2013 ஆம் ஆண்டு அருகாமையில் உள்ள நகர் ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கே அவர் அஜய் புஜரி என்பவரை சந்தித்துள்ளார். சில சந்திப்புகளுக்கு பின்னர் ரூபாலியிடம் தமது காதலை வெளிப்படுத்திய புஜரி, திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆனால் ரூபாலி ஏற்கெனவே ஒருவரை காதலித்து வந்ததால், புஜரியின் காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த புஜாரி, அழகு இருப்பதால் தானே இத்தனை ஆணவம் கொள்கிறாய், உனது அழகை சிதைத்து விடுகிறேன் பார் என அச்சுறுத்தியுள்ளார்.

ஆனால் இதை ரூபாலி கருத்தில் கொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் 2015 அம் ஆண்டு யூலை 28 ஆம் திகதி ரூபாலியின் வாழ்வில் மறக்க முடியாத அந்த துயர சம்பவம் நடந்தது.

அன்றைய தினம் திரைப்பட படப்பிடிப்பு முடித்து தமது அறையில் வந்த ரூபாலிக்கு, தாம் அருந்திய உணவில் போதை மருந்து கலந்து விட்டிருந்தது தெரிய வந்தது. இதில் அவர் ஆழ்ந்து தூங்கியுள்ளார். நள்ளிரவு 2 மணிக்கு ரூபாலியின் அறைக்கு வந்த புஜரி, தாம் மறைத்து வைத்திருந்த அசிட் போத்தலை திறந்து ரூபாலியின் மீது வீசியுள்ளார்.

இதில் முகம் வெந்து, உடல் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்ட ரூபாலியை மீட்டு அவரது தோழிகள் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர். மருத்துவமனையில் ரூபாலி உயிருக்கு போராடி வரும் நிலையில், அவரது தந்தை தமது மகளை கொன்றுவிடும்படி மருத்துவர்களிடம் கெஞ்சியுள்ளார்.

இதே நிலையில் அவரை தமது குடியிருப்புக்கு அழைத்து செல்வது மரியாதை இல்லை என தெரிவித்து மருத்துவமனையில் இருந்து வெளியெறிய அவர் அதன் பின்னர் தமது மகளை வந்து பார்க்கவே இல்லை.

அதன் பின்னர் காயங்கள் குணமடைந்த நிலையில் தாம் தமது வீட்டுக்கு செல்லவில்லை என கூறும் ரூபாலி, புஜரி மீது வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் போதிய ஆதாரம் ஏதும் இல்லாத நிலையில் அவர் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் தான் ரூபாலி குல்திப் என்பவரை சந்தித்து, பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். தற்போது ஒரு குழந்தைக்கு தாயான ரூபாலி லக்னோவில் உள்ள கொபி ஷொப் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். குறித்த கொபி ஷொப்பானது ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களால் நடத்தப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது.