இரு தலைகளுடன் பிறந்த கன்றுக்குட்டி!!

351

திருச்சியில் பசு மாடு ஒன்று, இரு தலைகளுடன் கூடிய ஆண் கன்றை ஈன்றெடுத்துள்ளது. திருச்சி எடமலைப்பட்டிப்புதூரை அடுத்த இந்திரா நகர் நத்தர் தெருவைச் சேர்ந்த தம்பதி குமாரசாமி- ராணி. இவர்கள் 15 ஆண்டுகளாக கறவை மாடுகளை பராமரிப்பு பால் விற்பனை செய்து வருகின்றனர்.

நேற்று காலை இவர்களது பசு மாடு கன்றை ஈன்றெடுக்க முயற்சித்தது, ஆனால் இரண்டு மணிநேரமாகியும் கன்று வெளியே வரமுடியாமல் சிரமப்பட்டது. ஒருவழியாக உடல் வெளியே வந்த நிலையில், தலை மட்டும் வரவில்லை. உடனடியாக கால்நடை மருத்துவர் வந்து சோதித்து பார்த்ததில் கன்றுக்குட்டிக்கு இரண்டு தலை இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து கன்றுக்குட்டியை வெளியே எடுத்தார், இத்தகவல் வெளியானதும் ஏராளமான மக்கள் கன்றுக்குட்டியை பார்த்து செல்கின்றனர்.

கன்றுக்குட்டி நலமாக இருப்பதாக குமாரசாமி தெரிவித்துள்ளார். எனினும் தலை பாரமாக இருப்பதால் நிற்க சிரமப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.