வவுனியாவில் முச்சக்கரவண்டி விபத்து : இருவர் வைத்தியசாலையில்!!

626

 
வவுனியா – மன்னார் பிரதான வீதியில் இன்று (31.01.2018) இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா நகரிலிருந்து மன்னார் வீதியூடாக பயணித்த மோட்டார் சைக்கில் மன்னார் வீதியில் அமைந்துள்ள புகையிரத கடவைக்கு அருகே சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து மன்னார் வீதியூடாக வவுனியா நகரம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியில் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலின் ஓட்டுனரும் முச்சக்கரவண்டியின் சாரதியும் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ் விபத்துச் சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரிவித்து 30 நிமிடங்கள் கடந்த போதிலும் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வருகை தராமையினால் வவுனியா – மன்னார் வீதியின் போக்குவரத்து சிறிது நேரம் பாதிப்படைந்திருந்தது.