வவுனியாவில் அதிகாலையில் வானில் ஏற்பட்ட மாற்றம்!!(காணொளி)

704

 
152 ஆண்டுகளுக்கு பின்னர், சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை ஒரே நேரத்தில் காணும் அரிய சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ளது.

இதன்படி சந்திர கிரகணம் தென்பட்டதுடன், 36 ஆண்டுகளுக்கு பின்னர் சுப்பர் மூன் வானில் தென்பட்டுள்ளது.

அந்த வகையில், சுப்பர் மூன் (Super Moon) மற்றும் பூரண சந்திர கிரகணத்தை வவுனியாவிலும் அவதானிக்க முடிந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

152 வருடங்களுக்கு பின்னர் இவ்வாறானதொரு சந்தர்ப்பம் வாய்த்துள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப் பிரிவின் பணிப்பாளர், பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.