பீஹாரில் பெண்ணொருவர் தன் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இடையூறாக இருந்ததால் தனது மூன்று மாத குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஹார் மாநிலம் பாட்னாவில் உள்ள Bakunthpur மாவட்டத்தைச் சேர்ந்தவர் காஜல், இவருக்கு மூன்று மாத ஆண் குழந்தை ஒன்று இருந்தது. இந்நிலையில் ஒருநாள் காஜலின் மாமனார் கைலாஷ் பட்டேல், வெளியே சென்று விட்டு ஒரு மணிநேரத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அதன் பின்னர், கிணற்றுக்கு அருகில் இருந்த ‘motor pump’-ஐ ‘Switch off’ செய்ய காஜலை அழைத்துள்ளார். ஆனால் அதற்கு காஜல் பதில் ஏதும் கூறாமல் இருந்ததால், அவரே கிணற்றுக்கு சென்று ‘Switch off’ செய்துள்ளார்.
அப்போது, தனது கால் இடறியதால் கிணற்றில் குழந்தையின் உடல் மிதப்பதைப் பார்த்துள்ளார் கைலாஷ். உடனே அதிர்ச்சியடைந்த அவர், வீட்டிற்குள் சென்று காஜலைப் பார்த்துள்ளார்.
அப்போது காஜல் மயக்கமடைந்த நிலையில் வீட்டினுள் கிடந்துள்ளார், அவரின் வாயில் துணி ஒன்று திணிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, கைலாஷ் அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். அதன் பின்னர், குழந்தையின் உடல் மீட்கப்பட்டு, காஜல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனைக்கு விரைந்த பொலிசார் காஜலிடம் விசாரணை நடத்தினர். அவர்களிடம் காஜல் கூறுகையில், ’என் வீட்டின் பின்பக்கம் முகமூடி அணிந்த மர்ம நபர் நுழைந்தான். சத்தம் கேட்டபோது, முதலில் அது என் கணவர் என்று நான் நினைத்தேன். அந்த மர்ம நபர் என் கை, கால்களை கட்டியதோடு, என் வாயில் துணியை வைத்து அடைத்து விட்டான். அதனால் என்னால் சத்தம் போட முடியவில்லை. அதன் பின்னர், எனது குழந்தையை கொண்டு சென்று கிணற்றில் வீசி விட்டு ஓடிவிட்டான்’ என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குழந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில், குழந்தை மூச்சுத்திணறல் ஏற்பட்டு, தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளதாக கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து பொலிசார் குழந்தை குறித்து தீவிரமாக காஜலிடம் விசாரித்துள்ளனர். அப்போது அவர் பதில் கூற திணறியுள்ளார். மேலும், அவர் பொய் சொன்னதை பொலிசார் கண்டுபிடித்துவிட்டனர். அதன் பின்னர், தன் குழந்தையை கொன்றது தாம் தான் என்று, காஜல் உண்மையை ஒப்புக் கொண்டார். தன்னால் குழந்தையை சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை என்றும், தனது மகிழ்ச்சியான வாழ்விற்கு குழந்தை தடையாக இருந்ததால் அதனை கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் காஜலின் உறவினர்களும் அதனை உறுதி செய்தனர். இதனைத் தொடர்ந்து, பொலிசார் காஜலை கைது செய்தனர்.







