வவுனியாவில் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மாபெரும் பரப்புரைக்கூட்டம்!!

525

 
வவுனியாவில் தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் மாபெரும் பரப்புரைக்கூட்டம் வவுனியா கலைமகள் விளையாட்டு மைதானத்தில் இன்று (03.02) மாலை 4.30 மணியளவில் கவிஞர் அருந்தவராசா தலைமையில் ஆரம்பமாகி நடைபெற்றது.

இப்பரப்புரைக்கூட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், செயலாளரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமாக சிவசக்தி ஆனந்தன், வடமாகாண கல்வி அமைச்சர் எஸ்.சர்வேஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராஜா, இ.இந்திரராசா, சனநாயக தமிழரசுக் கட்சியின் செயலாளர் எஸ்.சிவகரன், மற்றும் உள்ளுராட்சி சபைகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.‌