பாலி தீவில் பலியான இலங்கை இளைஞன்!!

203


 
இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இளைஞன் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

ஜா-எல பிரதேசத்தை சேர்ந்த பிரபல பகுதி நேர வகுப்பு ஆசிரியரான 30 வயதான நிசல் கொட்டின்கடுவ என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.



இந்த பகுதி நேர ஆசிரியர் திறந்த பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு மாணவர் எனவும் தெரிவருகிறது.

இரண்டு நண்பர்களுடன் இந்தோனேசியாவுக்கு சென்றிருந்துடன் அதன் பின்னர் பாலி தீவுக்கு விஜயம் செய்துள்ளனர். அங்கு கடலில் குளித்து கொண்டிருந்த போது அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.



இளைஞனின் உடல் இன்று இலங்கைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.