தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவுடன் முடிவுக்கு வரவேண்டும்!!

448

 

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் 07ஆம் திகதி நள்ளிரவுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இது விடயமான அறிவுறுத்தல்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் சக அரசியல் கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்கும் அறிவிக்கப்பட்டள்ளதாகவும் தேர்தல்கள் அணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.

இந்த அறிவுறுத்தலின்படி தேர்தல் பிரச்சார சிறு கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள், ஆதரவு திரட்டும் வீட்டுத் தரிசனம், அச்சு, இலத்திரனியல் ஒலிபெருக்கி உள்ளிட்ட ஊடகங்கள் மூலமான பிரச்சாரம் என்பன முழுமையாக முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என தேர்தல்கள் மேலதிக ஆணையாளர் எம்.எம். முஹம்மத் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் பெப்ரவரி 10ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியில் ஏக காலத்தில் சுமார் 13400 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறப் போகின்றன.

இத்தேர்தலில் உள்ளூராட்சி சபைகளை நிர்வகிப்பதற்காக மொத்தமாக 8356 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.