அழுகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம் : வெளியான அதிர்ச்சிப் புகைப்படம்!!

1050

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடம் இருந்து மீட்கப்பட்ட ஈராக்கின் மொசூல் நகரில் அழுகியநிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்றை மீட்டுள்ளனர்.

பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த மொசூல் நகரை மீட்க அளிக்கப்பட்ட விலைதான் குறித்த இளம்பெண்ணின் சடலம் என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மொசூல் நகரில் நடைபெற்ற பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகளாலும், எதிர் தாக்குதல் நடத்திய அமெரிக்க கூட்டுப்படைகளாலும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

கொல்லப்பட்ட பொதுமக்களின் உடல்கள் அப்புறப்படுத்தப்படாமல் இடிபாடுகளில் சிக்குண்டு காணப்படுகிறது. அப்பாவி பொதுமக்கள் கூட்டுப்படைகளின் உதவியை நாடி நீண்ட ஆறு மாதங்களாக காத்துக் கிடப்பதாக கூருகின்றனர்.

அழுகிய நிலையில் மீட்க்கப்பட்ட இளம்பெண்ணின் உடலானது இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அதே பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சுமார் 500 உடல்களில் குறித்த இளம்பெண்ணின் உடலும் ஒன்று. அமெரிக்க கூட்டுப்படைகளின் வான் தாக்குதலில் பெரும்பாலானவர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மொசூல் நகரை மொத்தமாக சோதனையிட்டால் மேலும் பல உடல்கள் சிக்கலாம் என மக்கள் விம்மும் குரலில் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான போர் என கூறிக்கொண்டு கூட்டுப்படைகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மொசூல் நகரில் கூட்டுப்படைகள் மேற்கொண்ட அதிரடி தாக்குதல்களால் ஒரே மாதத்தில் சுமார் 2,521 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், 1673 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

ஆனால் ஐக்கிய நாடுகள் சபை இந்த புள்ளிவிபரங்களை கண்டுகொள்ளவில்லை என்பது மட்டுமல்ல அமெரிக்க கூட்டுப்படைகளின் நடவடிக்கைகளை மெச்சியுள்ளது.