வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

514

 
முன்னால் சென்ற வாகனத்துடன் மோட்டார் சைக்கில் ஒன்று பின்னால் சென்று மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தாண்டிக்குளம் சாந்தசோலை சந்திக்கு அருகில் நேற்று (05.02) இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் காயமடைந்தவர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
.‌
நெடுங்கேணியில் இருந்து பப்பாசிப் பழங்களை ஏற்றிக்கொண்டு எப்பாவல நோக்கி பயணித்த டாட்டா வாகனத்தின் பின்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஏ9 வீதி தாண்டிக்குளம் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிலில் பயணித்த செல்வகுமார் (34 வயது) காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.