வவுனியா நகரசபைக்குட்பட்ட கோவில்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள தாய்சேய் பராமரிப்பு நிலையம் திருத்த வேலைகள் மேற்கொள்ள வேண்டியதன் காரணமாக மிக நீண்ட காலமாக இயங்கமுடியாத நிலையில் காணப்படுகிறது.
இவ் தாய்சேய் பராமரிப்பு நிலையத்தின் மூலம்கோவில்குளம்,கோவில்புதுக்குளம், சின்னப் புதுக்குளம், வெளிக்குளம்,தெற்கிலுப்பைகுளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த கர்ப்பிணி தாய்மார்களும் குழந்தைகளும் பயனடைந்து வந்தநிலையில் தற்போது தாய்சேய் நிலையம் இயங்க முடியாத நிலையில் உள்ளமையினால் பெரும் பாதிப்புக்குள்ளகியுள்ளனர்.
இப்பிரதேசங்களில் உள்ள கர்ப்பிணி தாய்மாரும் குழந்தைகளும் மருத்துவ சுகாதார சேவைகளைப் பெறும் பொருட்டு வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கே செல்ல வேண்டியுள்ளது. மேலும் வவுனியா மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் மதியநேரத்திற்கு பின்பே இவர்களுக்குரிய சேவைகளை பெற்றுக்கொள்ளகூடியதாக உள்ளது.
எனவே சம்பந்தபட்ட தரப்புகள் விரைவில் கோவில்குளம் தாய்சேய் பாராமரிப்பு நிலையத்தை மீள இயங்க வைப்பதற்கான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் அல்லது அருகில் உள்ள பொது கட்டிடமொன்றில் தற்காலிகமாக இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவன செய்யவேண்டுமென மேற்படி பிரதேசங்களை சேர்ந்த பயனாளர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..