ஏழைக் காதலனுடன் திருமணத்தை ஒத்தி வைத்த இளவரசி : வெளியான காரணம்!!

504

ஜப்பான் இளவரசி மேக்கோ தனது காதலருடனான திருமணத்தை அதிக அவசரப்படுவதாக கருதி ஒத்திவைத்துள்ளார். ஜப்பான் இளவரசி மேக்கோவின் திருமணமானது இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறும் என அறிவிப்பு வெளியான நிலையில் திடீரென்று 2020ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது பொதுமக்கள் மத்தியில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

திருமணம் குறித்து ஆழமான புரிதலை இருவரும் பெற்றுக் கொள்வதற்கும், போதுமான முன்னேற்பாடுகளை செய்துகொள்வதற்கும் இந்த கால தாமதம் உதவும் என அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஆனால் இளவரசி மேக்கோ தமது வாழ்க்கைத்துணையாக தெரிவு செய்த Kei Komuro என்பவரின் குடும்ப பின்னணியே குறித்த திருமண ஒத்திவைப்புக்கு முக்கிய காரணமாக இருக்க முடியும் என பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பேரரசர் Akihito-ன் பேரப்பிள்ளைதான் இளவரசி மேக்கோ, இவர் தமது பல்கலைக்கழக தோழரை திருமணம் செய்து கொள்வதால் இளவரசி பட்டத்தை துறக்க நேரிடும். கடந்த ஆண்டு இருவரது நிச்சயதார்த்த அறிவிப்பானது ஜப்பான் மக்களால் பெரிதும் கொண்டாடப்பட்டது.

திருமணம் ஒத்திவைத்தது தொடர்பில் இளவரசி மேக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமணத்திற்காக மிகவும் அவசரப்படுகிறோம் என்ற எண்ணம் எழுந்ததாலையே இந்த முடிவு. போதுமான ஏற்பாடுகளை செய்து முடிக்க கால அவகாசம் இல்லை. திருமண வாழ்க்கையில் அவசரப்பட்டு நுழைவது பொருத்தமாக இருக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இளவரசியின் திருமணம் தொடர்பில் ஜப்பான் நாளேடுகளில் வெளியாக செய்திகள் எதுவும் உண்மை இல்லை எனவும், இளவரசியின் திருமணம் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் உரிய நாள் பார்க்கப்பட்டு நடத்தப்படும் என அரண்மனை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.