கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கைப் பெண் ஒருவர் கைது!!

1136

24 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு தங்க கட்டிகளை சென்னைக்கு எடுத்துச் செல்ல முயற்சித்த இலங்கைப் பெண் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி – பேராதனை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான இந்த பெண், இன்று காலை 8.30 அளவில் சென்னை நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இதன்போது, குறித்த பெண் எடுத்துச் சென்ற பயணப் பொதியில் 100 கிராம் எடை கொண்ட 4 தங்கக்கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பெண்ணை கைது செய்த சுங்க அதிகாரிகள், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..