வவுனியாவில் கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு விசேட கூட்டம்!!

634

 
கபே அமைப்பின் தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு விசேட கூட்டம் இன்று (09.02.2018) காலை 10 மணிக்கு வவுனியா வை.எம்.சி.ஏ மண்டபத்தில் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இராஜ்மோகன் மனோராஜ் தலைமையில் இடம்பெற்றது.

இக் கூட்டத்தில் கபே அமைப்பின் ஆலோசகர் மோகனராஜா இராஜ்மோகன் , கபே அமைப்பின் கண்காணிப்பாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி தேர்தல்கள் சம்பந்தமாகவும் எவ்வாறு முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.

தேர்தல் தொடர்பாக முறைப்பாடுகளை 0773962899 என்ற இலக்கத்திற்கு பொதுமக்கள் அழைப்பினை மேற்கொண்டு தெரிவிக்க முடியுமென வவுனியா மாவட்ட இணைப்பாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..