வாக்களிப்பில் மக்களை வியப்பில் ஆழ்த்திய ஜனாதிபதி மைத்திரி!!

239

 
உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமது வாக்கினை வழங்கியுள்ளனர்.

ஜனாதிபதி சிறிசேன தனது கட்சி சார்பாக வாக்குகளை பதிவு செய்துள்ளார். பொலன்னறுவை ஸ்ரீ வித்தியாலோக்க விகாரையில் ஜனாதிபதி தனது வாக்கினை வழங்கினார்.

இன்று காலை 10 மணிக்கு வாக்களார்களுடன் வரிசையில் நின்று தனது வாக்குகளை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
ஜனாதிபதி தனது மகன் தஹாம் சிறிசேனவடன் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்று அதிகாரம் படைத்த ஜனாதிபதி மைத்திரி சாதாரண குடிமகன் போன்று வரிசையில் நின்று வாக்களித்தமை பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை வழங்கியுள்ளார். கொழும்பு பல்லைக்கழகத்தில் உள்ள கல்லூரி மண்டபத்தில் பிரதமர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

வாக்களித்த பின்னர் பிரதமர் இம்முறை தேர்தல் தொடர்பில் ஊடகங்களில் கருத்து வெளியிட்டுள்ளார். ஐக்கிய தேசிய கட்சியினால் புதிய தேர்தல் முறை ஆரம்பித்த பின்னர் இம்முறை தேர்தல் அமைதியாக இடம்பெறுவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..