முதலாவது தடவையாக வாக்களிக்கச் சென்ற 19 வயது இளைஞர் உயிரிழந்த சோகம்!!

551

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கிதுல்கல, பிபிலிஓய பிரதேசத்தில் பஸ்ஸின் மிதிபலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் கீழே விழுந்ததால் அதே பஸ்ஸில் அடிபட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதலாவது தடவையாக தனது வாக்குப் பதிவை மேற்கொள்ளும் நோக்கில் சென்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாமிமலை பிரதேசத்தைச் சேர்ந்த லக்‌ஷித தேனுக பெரேரா என்ற இளைஞரே உயிரிழந்துள்ளதுடன், சடலம் தற்போது அவிஸ்ஸாவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான முழு விபரங்களும் தொகுதி வாரியாக..