சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள் : தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய கோரிக்கை!!

308

நடைபெற்று முடிந்துள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் இரவு 9 மணியளவில் இருந்து வெளியிடப்படும் சாத்தியங்கள் உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சமூக வலைப்பதிவுகள், மற்றும் சமூக ஊடகங்களில் தவறான தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றதாகவும், அவ்வாறன தவறான முடிவுகளை வெளியிட்டு மக்களை குழப்பும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ தேர்தல் முடிவுகளை வெளியிடவேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்தது.