கொழும்பு மாந­க­ர முதல் பெண் மேய­ராக பத­வி­யேற்­கிறார் ரோஸி சேன­நா­யக்க!!

573

கொழும்பு மாந­க­ர­ச­பையின் முதல் பெண் மேய­ராக ரோஸி சேன­நா­யக்க பத­வி­யேற்­க­வுள்ளார். கொழும்பு மாந­க­ர­ச­பைக்­கான தேர்­தலில் ஐக்­கிய தேசி­யக்­கட்சி 1 இலட்­சத்து 31 ஆயி­ரத்து 353 வாக்­கு­களைப் பெற்று 60 ஆச­னங்­களை தன்­வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

110 உறுப்­பி­னர்­களைக் கொண்ட கொழும்பு மாந­க­ர­ச­பையில் 60 உறுப்­பி­னர்­களை ஐக்­கிய தேசி­யக்­கட்சி பெற்­றுள்­ள­மை­யினால் தனித்து ஆட்சி அமைக்­கக்­கூ­டிய நிலைமை உரு­வா­கி­யி­ருக்­கின்­றது. ஆனால் ரோஸி சேன­நா­யக்­கவை மேய­ராகக் கொண்ட நிர்­வாகம் அமைக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்தத் தேர்­தலில் பொது­ஜன பெர­முன 60 ஆயி­ரத்து 87 வாக்­கு­களைப் பெற்று 23 உறுப்­பி­னர்­க­ளையும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி 31 ஆயி­ரத்து 421 வாக்­கு­களைப் பெற்று 12 உறுப்­பி­னர்­க­ளையும் பெற்­றுள்­ளன. அமைச்சர் மனோ கணேசன் தலை­மை­யி­லான ஒருங்­கி­ணைந்த முற்­போக்கு கூட்­டணி 27 ஆயி­ரத்து 168 வாக்­கு­களைப் பெற்று 10 உறுப்­பி­னர்­களை தன்வ­சப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதில் தொகுதி ரீதி­யாக வெள்­ள­வத்தை பாமன்­கடை மேற்கு தொகு­தியில் போட்­டி­யிட்ட பி.பாஸ்­கரா வெற்­றி­பெற்­றுள்ளார். மேயர் வேட்­பா­ள­ராக போட்­டி­யிட்ட சண் குக­வ­ரதன் சொற்ப வாக்கு வித்­தி­யா­சத்தில் தோல்­வி­ய­டைந்­துள்ளார். இருந்தபோதிலும் விகி­தா­சார பட்­டியல் அடிப்­ப­டையில் 9 ஆசனங்­களைப் பெற்று மொத்­த­மாக 10 உறுப்­பி­னர்­களை முற்போக்­குக்­கூட்­டணி தன­தாக்­கிக்­கொண்­டுள்­ளது.

மக்கள் விடு­தலை முன்­னணி 14 ஆயி­ரத்து 234 வாக்­கு­களைப் பெற்று 6 ஆச­னங்­களை கைப்­பற்­றி­யுள்­ளது. நவோ­தய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் எஸ்.கே.கிருஷ்ணா தலை­மையில் போட்­டி­யிட்ட சுயேச்­சைக்­குழு 2 ஆனது 4833 வாக்­குக்­களைப் பெற்று 2 உறுப்­பி­னர்­களை பெற்­றுள்­ளது. இலங்கை தொழி­லாளர் காங்­கி­ர­ஸுடன் இணைந்து போட்­டி­யிட்ட ஜன­நா­யக மக்கள் காங்­கிரஸ் அணி 2853 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் இலங்கை தேசிய சக்தி 3251 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் நல்­லாட்­சிக்­கான தேசிய முன்­னணி 2771 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் ஐக்­கிய தேசிய சுதந்­திர முன்­னணி 1380 வாக்­கு­களைப் பெற்று 1 ஆச­னத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ளன.

ஐக்­கிய தேசி­யக்­கட்­சியில் கொட்­டாஞ்­சே­னையில் போட்­டி­யிட்ட மேல்­மா­கா­ண­சபை உறுப்­பினர் ராமின் புதல்­வ­ரான ஜோன் ராம் வெற்­றி­பெற்­றுள்ளார். இதே­போன்று காயத்­திரி விக்­கி­ர­ம­சிங்க வெற்­றி­வாகை சூடி­யுள்ளார். வெள்­ள­வத்­தையில் போட்­டி­யிட்ட திரு­மதி அமிர்­தாம்­பிகை கோபாலன், பிர­ணவன் ஆகி­யோரும் வெற்­றி­பெற்­றுள்­ளனர்.

பாமன்­கடை மேற்குத் தொகு­தியில் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் சார்பில் போட்டியிட்ட ஊடகவியலாளர் உமாசந்திர பிரகாஷ், ஜனநாயக மக்கள் காங்கிரஸின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை உறுப்பினருமான நல்லையா குமரகுருபரன் ஆகியோரும் தோல்வியைத் தழுவியுள்ளனர். இந்தத் தொகுதியிலேயே ஒருமித்த முற்போக்கு கூட்டணியில் வேட்பாளராக போட்டியிட்ட பாஸ்கரா வெற்றிபெற்றுள்ளார்.