வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவில் அனுசரணையின் கீழ் இயங்கும் எல்லப்பர் மருதங்குளத்தில் அமைந்துள்ள சிவன் முதியோர் இல்லத்திற்கு நேற்று முன்தினம் (12.02.2018) திங்கட்கிழமை வடமாகாண முதலமைச்சர் கெளரவ நீதியரசர். க.வி.விக்னேஸ்வரன் விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இவருடன் வடமாகாண சபை உறுப்பினரான திரு.G.T.லிங்கநாதனும் வருகைதந்து இல்லத்தின் தேவைப்பாடுகள் குறித்து ஆலய அறங்காவலர்களிடம் கேட்டறிந்து கொண்டார்.
இங்கு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழரின் ஒற்றுமைதான் எமக்குரிய உரிமையைப் பெற்றுத்தரும் எனவும் தமிழ் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
அவர் அங்கு தெரிவித்த கருத்துக்களை கீழுள்ள காணொளியில் காணுங்கள்..






