வவுனியா தேக்கவத்தை பகுதியில் கஞ்சா, ஹெரோயினுடன் மூவர் கைது!!

276

வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்று (15.02.2018) காலை 11.30 மணியளில் கஞ்சா மற்றும் ஹெரோயினை வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திடீரென குறித்த நபர்களின் வீட்டினை சோதனையிட்ட சமயத்தில் 10 மில்லிகிராம் ஹெரோயின் மற்றும் 4 கிலோ 835 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதனடிப்படையில் மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளதாகவும் மேலதிக விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.