பம்பலப்பிட்டி ரயில் நிலையத்திற்கு அருகில் நபர் ஒருவர் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாணந்துரையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ரயில் மீது பாய்ந்தே குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சுமார் 60 வயதுடைய நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். எனினும் குறித்த நபர் இன்னமும் அடையாளம் காணப்படவில்லை.
அவரது சடலம் அதே ரயிலில் ஏற்றப்பட்டு பம்பலப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.






