ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அபராதம்!!

473

ரயில் பெட்டியில் சித்திரம் வரைந்த வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மாத்தறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் ஒன்றின் பெட்டியில் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் சித்திரம் வரைந்துள்ளனர்.

இவ்வாறு சித்திரம் வரைந்த வெளிநாட்டுப் பிரஜைகளை மாத்தறை புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பிடித்து, பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் இந்த இருவரும் மாத்தறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததன் அடிப்படையில் இருவரையும் நட்ட ஈடாக 74060 ரூபாவினை செலுத்துமாறும், அபராதமாக தலா ஆயிரம் ரூபா செலுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.