வவுனியாவில் மோட்டார் சைக்கிலில் சென்றவரிடம் ரி 56ரக துப்பாக்கியும் ரவைகளும் மீட்பு!!

720

வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவு 7 மணியளவில் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் மோட்டார் சைக்கிலில் சென்ற ஒருவரிடம் அவரது பையினை சோதனை மேற்கொண்டபோது ரி 56ரக துப்பாக்கியும் 611 ரவைகளையும் அவரிடமிருந்து மீட்டுள்ளதாக பொலிசார் தொவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொலிசார் மேலும் தெரிவிக்கையில்,

நேற்று இரவு 7 மணியளவில் நெடுங்கேணி மாறாயிலுப்பை நாகதம்பிரான் கோவிலடியின் போக்குவரத்துப் பொலிசார் வீதியால் சென்ற மோட்டார் சைக்கிலினை சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது ஒரு பையினுள் ரி 56ரக துப்பாக்கியும் 611 ரவைகளுடனும் குளவிசுட்டான் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் இதையடுத்து அவரது வீட்டினையும் பொலிசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் நெடுங்கேணிப் பொலிசாரினால் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.