சாதிக்க வேண்டிய மாணவன் கடலில் மூழ்கி சடலமான சோகம்!!

224

 
மட்டக்களப்பு – களுவங்கேணி கடலில் மூழ்கி நேற்றைய தினம் 16 வயது மாணவன் உயிரிழந்துள்ளார். கடலில் குளிக்கச் சென்ற வேளை மாணவன் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவர் 16 வயதுடைய ராஜா டென்வர் கிருபா எனவும், நுவரெலியாவை பிறப்பிடமாக கொண்டவர் என்றும் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, உயிரிழந்த மாணவன் க.பொ.த உயர்தரத்தில், தொழில்நுட்ப துறையில் கல்வி கற்பதற்காக, வந்தாறுமூலையிலுள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

குறித்த மாணவனின் சடலம், செங்கலடி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதுடன், பிரேத பரிசோதனைகளை அடுத்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.