உடலிலுள்ள கெட்ட நீரை வெளியேற்றும் வழிகள்!!

1291


நீர் தேக்கம் அல்லது நீர் கட்டு என்பது ஒடிமா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் நமது உடலில் உள்ள செல்களுக்கு வெளிப்புறத்தில் உள்ள சுவருக்கு இடையை நீர் தேங்கி கொள்ளும். இந்த பிரச்சினை பொதுவாக அழற்சி அல்லது கிருமிகள் தொற்றால் ஏற்படுகிறது.



இதற்கு சில வீட்டு வைத்தியங்களை கொண்டே இதை எளிதில் எவ்வாறு போக்குவது என்று பார்ப்போம்.

வெள்ளைப் பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.



ஒரு பாத்திரத்தில் கொதித்த தண்ணீரில் பெருஞ்சீரகம் போட்டு 15-20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு வடிகட்டி வெதுவெதுப்பான நீரை பருகவும். இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை என்ற வீதத்தில் செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்..



அரை எலுமிச்சையை ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் கலந்து தயாரிக்கவும். நன்றாக கலந்து கொள்ளவும். ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


ஜஸ் கட்டிகளை ஒரு துணியில் கட்டிக் கொண்டு வீங்கிய இடத்தில் 10 நிமிடங்கள் வைத்து அப்புறம் 10 நிமிடங்கள் கழித்து மறுபடியும் ஒத்தடம் கொடுக்க வேண்டும். இதை 1மணி நேரம் செய்ய வேண்டும். கொஞ்சம் கனமான துணியாக இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் நாளடைவில் நல்ல மாற்றத்தை காணலாம்.

வெங்காயத்தை நசுக்கி ஒரு நாளைக்கு இரண்டு முறை என்று வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ஒடிமா சரியாகி விடும்.


மிதமான தீயில் ஓரு பாத்திரத்தில் தண்ணீரை சூடுபடுத்த வேண்டும். பிறகு கொத்தமல்லி விதைகளை சேர்த்து தண்ணீர் பாதியாகும் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி ஒரு நாளைக்கு மூன்று முறை என்று வெதுவெதுப்பாக குடிக்கவும் இவ்வாறு செய்வதனால் ஒடிமா குணமடையும்.

ஒரு நாளைக்கு மூன்று வாழைப்பழம் சாப்பிட்டால் உடலிலுள்ள அதிகப்படியான நீர் வெளியேறிவிடும்.

ஒரு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சையை இரவில் ஊற வைத்து அடுத்த நாள் அதை சாப்பிடவும். தேங்கிய நீர் முற்றிலுமாக வற்றிவிடும்.

பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஒரு டீ ஸ்பூன் தேன் சேர்க்கவும், பிறகு அடுப்பை அணைத்து விட்டு அதில் டான்டெலியன் இலைகளை சேர்க்கவும். மூடியை மூடி அப்படியே 5 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு செய்வதனால் ஒடிமா குறைய வாய்ப்பு உள்ளது.


கொதிக்கின்ற தண்ணீரில் பார்ஸிலி இலைகளை போட்டு ஒரு கப் தண்ணீரில் 5 நிமிடங்கள் வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி அந்த நீரை குடிக்கவும். ஒரு நாளைக்கு மூன்று முறை என்றால் நல்ல பலன் கிடைக்கும்.

ஒரு நீளமான டம்ளரில் தினமும் ஒரு முறை கிரான்பெர்ரி ஜூஸ் குடித்தால் நீர் தேக்கத்தை சரி செய்கிறது. ஒரு டேபிள் ஸ்பூன் அப்பிள் சிடார் வினிகரை ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்தால் ஒடிமா சரியாகி விடும்.

ஒரு பக்கெட் நிறைய வெதுவெதுப்பான தண்ணீரில் 1 டேபிள் ஸ்பூன் எப்சம் உப்பு கலந்து அதில் நீர் தேங்கியுள்ள பகுதியை மூழ்க வைக்க வேண்டும். கிட்டத்தட்ட 10-15 நிமிடங்கள் வைக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதும்.