ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைச்சர்கள் அரசாங்கத்தை விட்டுச் செல்ல மாட்டார்கள்!!

255

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்களும் ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் அரசாங்கத்தில் இணைந்து செயற்படுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுதந்திரக்கட்சியின் பொருளாளரான அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அமைச்சர்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தை விட்டு செல்லப் போவதில்லை எனவும் வலுவான அணியாக அரசாங்கத்தில் செயற்பட போவதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்குள் முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தொடர்ந்தும் இருப்பதாகவும் அந்த நோக்கத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பதாகவும் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.