வவுனியா வடக்கு பழச்செய்கையாளர் சங்கத்தின் புதிய கட்டடத்தொகுதி நேற்று (19.02.2018) மதியம் 12.30 மணியளவில் திறக்கப்பட்டது.
கட்டடத்தை நோர்வே நாட்டின் இலங்கைக்கான பிரதி உயர்ஸ்தானியர் மோனிக்கா சிபென்ஸ்கறு திறந்துவைத்தார்.
நோர்வே நாட்டின் 38 லட்சம் ரூபா நிதியுதவியுடன் ஐ.எல்.லோ. நிறுவனத்தினால் அலுவலக தொகுதியும் பழம் பதனிடும் தொகுதியும் மறுசீரமைப்புச் செய்யப்பட்டது.