எரிவாயு விலை அதிகரிக்கப்படுமா?

501

எரிவாயு விலை தற்போதைக்கு அதிகரிக்கப்பட மாட்டாது என்று வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக எரிவாயு சிலிண்டர்களுக்கான விலையை அதிகரிக்க அனுமதிக்குமாறு கேஸ் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

எனினும் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம தலைமையிலான வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்துவதற்கான அமைச்சரவை உபகுழுவின் அனுமதி இன்றி எரிவாயு விலையை அதிகரிக்க முடியாது என்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே தற்போதைக்கு எரிவாயு விலை அதிகரிக்கப்பட மாட்டாது. ஆனால் சில மாதங்களுக்குள்ளாக விலை அதிகரிப்பு சாத்தியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று உலக சந்தையில் ஏற்படும் விலை அதிகரிப்புக்கு ஏற்ப எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான சூத்திரம் ஒன்றை அமைச்சரவை அறிமுகப்படுத்த முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.